தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் இயக்குனராக பல்வேறு சீரியல்களில் இயக்குனராக பணியாற்றி வந்தவர் தாய் செல்வம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம், நாம் இருவர் நமக்கு இருவர், காத்து கருப்பு, பாவம் கணேசன், காதல் முதல் கல்யாணம் வரை, ஈரமான ரோஜாவே 2 உள்ளிட்ட சீரியல்களை இயக்கியவர்.

அதுமட்டுமல்லாமல் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான நியூட்டனின் மூன்றாம் விதி என்ற படத்தையும் இயற்றியவர். தற்போது இவர் உடல்நல குறைபாடு காரணமாக சற்று முன் மரணம் அடைந்தார். இவரது மறைவு திரையுலகில் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.