சற்று முன்
Home / செய்திகள் / “நினைவுகளுடன் பேசுதல்” – சத்தியமூர்த்தியின் நினைவேந்தல் நிகழ்வு

“நினைவுகளுடன் பேசுதல்” – சத்தியமூர்த்தியின் நினைவேந்தல் நிகழ்வு

இறுதி யுத்த நடவடிக்கையின் போது ஊடகப்பணியில் உயிரிழந்த ஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக பிற்பகல் 3.00 மணியளவில் யாழ். நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

அதனை தொடர்ந்து 3.30 இற்கு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மண்டபத்தில் சத்தியமூர்த்தியின் நினைவுகளுடன் பேசுதல் எனும் நூல் வெளியீடு நடைபெற்றது. குறித்த நூலினை யாழ்ப்பாணம் இந்துக கல்லூரியில் சத்திய மூர்த்தியுடன் ஒன்றாய் கல்விகற்ற “91 ஆம் ஆண்டு பழைய மாணவ நண்பர்கள்” இணைந்து உருவாக்கியிருந்தனர்.

யாழ்.ஊடக அமையம் மற்றும் எழுகலை இலக்கிய பேரவை என்பவை இணைந்து முன்னெடுத்த இந்நிகழ்வில் ஊடக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் அவரது நண்பர்கள் நினைவுரைகளை ஆற்றினார்கள்.

இறுதி யுத்த காலத்தில் அர்ப்பணிப்புடனான ஊடகப்பணியில் பங்கெடுத்திருந்த ந.சத்தியமூர்த்தி இராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்திருந்தார். அவரது உன்னதமான ஊடகப்பணியினை கௌரவித்து விடுதலைப்புலிகளால் நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

அரசியல் கைதியான சிவ ஆரூரன் 15 வருடங்களின் பின் நிரபராதி என விடுவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது, 2006 ஆம் ஆண்டு பித்தல ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com