இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள தம்பிலுவில் கிராமத்தில் 1985 மே 16 முதல் மே 18 வரை இடம்பெற்ற 4படுகொலைகள் தம்பிலுவில் படுகொலைகள் என அழைக்கப்படுகின்றன.
நற்பிட்டிமுனை, துறைநீலாவணை, சேனைக்குடியிருப்பு கிராமங்களில் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட 60 தொடக்கம் 63 வரையான தமிழ் இளைஞர்கள் இந்நாட்களில் படுகொலை செய்யப்பட்டனர்.
சுற்றிவளைக்கப்பட்ட இணைஞர்களில் சிலர் அவ்விடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
18 முதல் 25 வயது வரை மதிக்கப்பட்ட சுமார் 40 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, 18 மைல் தெற்கேயுள்ள இடுகாடு ஒன்றுக்கு அழைத்து வரப்பட்டு அவர்களைக் கொண்டே குழிகள் தோண்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் அங்கேயே புதைக்கப்பட்டார்கள். இவர்களின் உடல்கள் பின்னர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, மட்டக்களப்புக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு புதைக்கப்பட்டன.