தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டிருப்பது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளின் நிலைப்பாட்டின் அடிப்படையில் சிலருக்கு எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கலாம் ஆனால் நான் அவைபற்றி எனக்கு எதுவித கவலையும் இல்லை. ஏனெனில் நான் கட்சிரீதியாக எதுவித நிலைப்பாட்டடையும் எடுக்கவில்லை. தமிழ் மக்கள் பேரவை ஒரு கட்சியும் அல்ல அது மக்களால் உருவாக்கப்பட்ட பேரவை என வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்,
தமிழ் மக்கள் அவை தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பில் முதலமைச்சரிடம் கேள்வி ஒன்றை எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
குறித்த விடயம் தொடர்பில் முதலமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரா.சம்மந்தனை கொழும்பில் சந்தித்தபோது மக்கள் அவை தொடர்பாக தெரிவித்திருந்தேன். இதன்போது நான் கூறிய விடயங்களை அவர் முழுமையாக கேட்டார். அதாவது மக்கள் அவை ஒரு கட்சி அல்ல கடந்த பல வருடங்களில் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வை கொடுக்கப்போகின்றோம். என்பதை எவ்வாறு அரசாங்கம் கூறாமல் இருக்கின்றதோ அதேபோன்று தமிழ் மக்களும் தமக்கு என்ன தேவை என்பதை கூறாமலே இருக்கின்றார்கள்.
இந்நிலையில் அதனை மக்களிடமிருந்து அறிந்து கொண்டு வெளிப்படுத்தவதற்கான ஒரு அமைப்பாகவே இதனை நாங்கள் பார்க்கிறோம். என்பதை தெளிவுபடுத்தினேன். மேலும் கட்சியாக்கும் எண்ணம் அதற்காக செயற்படும் எண்ணம் இல்லை. என்பதையும் நான் தெளிவுபடுத்திய நிலையில் இது ஒரு ஜனநயாகரீதியான செயற்பாடு என்பதை இரா.சம்மந்தன் ஒத்துக் கொண்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.