இன்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள விற்பனை நிலையம் ஒன்று இன்று அதிகாலை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.
அதிகாலை 2.30 மணிளவில் விற்பனைநிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவி கடைமுழுவதும் பரவி முழுமையான சேதத்தைஏற்படுத்தியது. கடையில் தங்கியிருந்த ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த நபர் யாழ்ப்பாணம் போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த தீப்பரவலை யாழ் மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. விற்பனை நிலையம் தீப்பற்றி எரிந்தமை தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.