சற்று முன்
Home / செய்திகள் / ரணிலுக்கு ஆதரவுகோரி இந்தியாவில் ஆர்ப்பாட்டம் !

ரணிலுக்கு ஆதரவுகோரி இந்தியாவில் ஆர்ப்பாட்டம் !

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலமையையடுத்து புதுடில்லியில் உள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்தின் இலங்கை மாணவர்கள் சிலர் அமைதிப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமனம் செய்யப்பட்டமை ஜனநாயக விரோத செயல் என்று தெரிவித்து போராட்டம் நடாத்தப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்று புதுடில்லியில் உள்ள இலங்கை தூதரகத்தின் பிரதித் தூதுவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சுமார் அயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கையொப்பமிட்டு இந்தக் கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com