சற்று முன்
Home / Uncategorized / கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் குடிவரவு, குடியகல்வு திணைக்களம்  வெளியிட்டுள்ள தகவல்!

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் குடிவரவு, குடியகல்வு திணைக்களம்  வெளியிட்டுள்ள தகவல்!

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(30.11.2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு விநியோகம்
இதற்கமைய ஒரு நாள் சேவையின் கீழ் தினமும் 2,500 முதல் 3,000  கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னதாக நாளொன்றில் சராசரியாக 1,500 கடவுச்சீட்டுகள் ஒரு நாள் சேவையின் கீழ் விநியோகிக்கப்பட்டுள்ளன.

20,000 ரூபாய் அபராதம்
இதேவேளை ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை வழங்குவதற்கு 20,000 ரூபா அறவிடப்படுகின்றது.

மேலும், ஒரு வருடத்திற்குள்  கடவுச்சீட்டு தொலைந்து போனால் 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com