சற்று முன்
Home / செய்திகள் / கூட்டமைப்பை மறுசீரமைத்து கஜேந்திரகுமாரை மீண்டும் இணையுங்கள் – விக்கினேஸ்வரன் தெரிவிப்பு

கூட்டமைப்பை மறுசீரமைத்து கஜேந்திரகுமாரை மீண்டும் இணையுங்கள் – விக்கினேஸ்வரன் தெரிவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மறுசீரமைப்புச் செய்வதோடு கஜேந்திரகுமாரையும் மீண்டும் இணைத்துக்கொண்டு செயல்பட்டால் தனிக் கட்சி அமைத்துச் செயல்படும் தேவை இருக்காது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கடந்த வாரம் அவசரமாக முதலமைச்சரை சந்தித்திருந்தார். இச் சந்திப்பின்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் மாகாண சபைத் தேர்தலில் முதல்வரின் நிலைப்பாடு தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இடம்பெற்ற சந்திப்பின்போது தனித்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றோ அல்லது கூட்டமைப்பினை சிதைக்க வேண்டும் என்றோ நான் எண்ணவில்லை. இருப்பினும் அனைத்தும் மக்களின் விருப்பமே. அதேநேரம் கூட்டமைப்பு ஆரம்பிக்கும்போது அதனுள் இருந்த அனைவரும் கூட்டமைப்பில் தொடர்ந்தும் அங்கம் வகிக்க வேண்டும்.

இந்த வகையில் கஜேந்திரகுமார் போன்றோர் மீண்டும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம் ஏனையவை கட்சிக்குள் பேசித் தீர்க்ககூடியவைகள். அதேநேரம் கூட்டமைப்பிலும் மாவை. சேனாதிராசா , சாம் போன்றவர்களுடன் எனக்கு எந்த முரண்பாடும் கிடையாது. இருப்பினும் ஒரு சிலரே மாறுபட்டு காணப்படுகின்றனர். எனவும் குறிப்பிட்டுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

பொலிஸ் அதிகாரம் இல்லை – 13 மைனஸ் வழங்க ரணில் தீர்மானம்

பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் காணி அதிகாரங்களோடு மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com