சர்ச்சைக்கு பேர் போன அந்த பெரிய நம்பர் நடிகை தற்போது சிவமான இயக்குனர் ஒருவரை காதலித்து வருகிறார். ஆனால், இதற்கு முன்பு வம்பு நடிகைரையும், பபுள் கம் பாடி நடிகைரையும் காதலித்து பிரிந்தார்.
ஆனால், காதல் முறிவுக்கு பின்னரும் வம்பு நடிகருடன் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடித்தார். அந்த படமும் ஹிட் ஆனது. இந்நிலையில், பபுள் கம் பாடி தயாரித்து நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக பெரிய நமபர் நடிகையை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்து அதற்கு பிரபல இயக்குனர் ஒருவர் மூலமாக தூது விட்டிருகிறார் பபுள் கம் பாடி.
எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த ஆளு நடிக்க மாட்டேன். அந்த ஆளு பண்ண துரோகத்தையும் மறக்க மாட்டேன். உங்க மேல நல்ல மரியாதை வச்சி இருக்கேன். அதை கெடுத்துக்காதிங்க என்று தூது சென்ற ந்த இயக்குனரை காது கருக கருக திட்டி தீர்த்துள்ளார் சர்ச்சை நடிகை. அப்போது, அவருடன் தற்போதயை காதலரான அந்த சிவமான இயக்குனரும் உடனிருந்துள்ளார்.
உண்மைதான், வம்பு நடிகருடன் காதல் மட்டும் தான். ஆனால், பபுள் கம் பாடி நடிகருக்காக படங்களில் நடிக்காமல் சினிமாவில் இருந்தே விலகும் முடிவுக்கு வந்த நடிகை படப்பிடிப்பு தளத்தில் இருந்த எல்லோரையும் கையெடுத்து கும்பிட்டு கதறி அழுத காட்சிகள் எல்லாம் அரங்கேரியது. அவரது பெயரை கையில் டாட்டுவாக கூட போட்டுக்கொண்டார். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு மெகா பட்ஜெட் படம் எடுக்கும் அளவுக்கு பல கோடிகளை பபுள் கம் பாடிக்கு பரிசாக வழங்கியுள்ளார். இவ்வளவு செய்தும் கடைசியில் அம்மணியை பிரிந்து சென்றார் பபுள் கம்.
இதனால் தான் தூது வந்த இயக்குனரையே இந்த அளவுக்கு கழுவி ஊற்றி அனுப்பியிருக்கிறார் அம்மணி.