சற்று முன்
Home / செய்திகள் / யாழ்ப்பாணம் – அம்பாறை இ. போ. ச பேருந்து நடத்துனரிடமிருந்து பணத்தை கொள்ளையடித்த கும்பல் – கிளிநொச்சியில் சம்பவம்

யாழ்ப்பாணம் – அம்பாறை இ. போ. ச பேருந்து நடத்துனரிடமிருந்து பணத்தை கொள்ளையடித்த கும்பல் – கிளிநொச்சியில் சம்பவம்

யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கிபயணித்த இ.போ.ச பேருந்தின் நடத்துனரை தள்ளி விழுத்திவிட்டு சுமார் 59 ஆயிரத்து 177ரூபாய் பணத்தை கும்பல் ஒன்று கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

மேற்படி சம்பவம் நேற்றைய தினம் இரவு கிளிநொச்சி – உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து பயணம் செய்த 3 பேர் உமையாள்புரம் பகுதியில் இறங்கியுள்ளனர். அவர்கள் பேருந்திலிருந்து இறங்குவதற்கு நடத்துனர் இடம்கொடுத்த நிலையில் நடத்துனரை தள்ளி விழுத்திய குறித்த கும்பல் நடத்துனரிடமிருந்த பணத்தினை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதேவேளை குறித்த திருடர்களுடன் தொடர்புடைய வேறு சிலரும் அந்த இடத்தில் காத்திருந்து திருடர்களுடன் சேர்ந்தே ஓடியதாக பேருந்திலிருந்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com