சற்று முன்
Home / விளையாட்டு / JSL சுற்றுத் தொடரில் தனது முதல் போட்டியில் மூன்று இலக்குளால் வென்றது அரியாலை வாரியஸ்

JSL சுற்றுத் தொடரில் தனது முதல் போட்டியில் மூன்று இலக்குளால் வென்றது அரியாலை வாரியஸ்

JSL சுற்றுத் தொடரில் நேற்று (19.01.2019) நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் அரியாலை வாரியஸ் அணி பருத்தித்துறை சுப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மூன்று இலக்குகளால் வெற்றிபெற்றுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அரியாலை வாரியஸ் அணி களத்தடுப்பைத் தீர்மானித்தது. முதலிலே துடுப்பெடுதாடிய அணியினர் பருத்தித்துறை சுப்பர் கிங்ஸ் 20 பந்து பரிமாற்றங்களை எதிர் கொண்டு 06 இலக்குகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

துடுப்பாட்டத்தில் பருத்தித்துறை சுப்பர் கிங்ஸ் அணி சார்பாக ரஜீவன் ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களையும் பிரஷாத் 23 ஓட்டங்களையும் லதுஷன் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் அரியாலை வாரியஸ் அணி சார்பாக 04 பந்துப்பரிமாற்றங்களில் ஜெரீக் துஷாந் 19 ஓட்டங்களை விட்டு கொடுத்து 02 இலக்குகளைச் சாய்த்தார் பிரியலக்ஷன் 04 பந்துப்பரிமாற்றங்களை வீசி 40 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்குகளை சாய்த்தார்.

156 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என துடுப்பெடுதாடிய அரியாலை வாரியஸ் அணியினர் 19.1 பந்து பரிமாற்றங்களில் 07 இலக்குகளையும் இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். ஜெரீக் துஷாந் 41 ஓட்டங்களையும் துவாரகசீலன் 29 ஓட்டங்களையும். மதுஷன் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பருத்தித்துறை சுப்பர் கிங்ஸ் அணி சார்பாக லதுஷன் 01 பந்துப்பரிமாற்றங்களை வீசி 07 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 01 இலக்குகளை சாய்த்தார். அஜாந் 04
பந்துப்பரிமாற்றங்களை வீசி 24 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 01 இலக்குகளை சாய்த்தார்.

அரியாலை வாரியஸ் 03 இலக்குகளால் வெற்றி பெற்றனர் நடைபெற்ற ஆறாவது போட்டியில் ஜெரீக் துஷாந் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இலங்கையை வெல்லுமா இந்தியா?

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 2 வது ஒருநாள் போட்டி கொல்கத்தா – ஈடன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com