தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று (05) காலை ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பை முடித்துக் கொண்டுள்ளனர்.
எரிபொருள் பிரச்சினையை முன்வைத்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்திருந்தது.
இதன்படி, அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது தனியார் பேருந்துகளுக்கு போதியளவு எரிபொருள் வழங்குவதாக இணக்கம் காணப்பட்டதன் அடிப்படையில் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.