சற்று முன்
Home / செய்திகள் / 3வது அரசியல் அமைப்பை தயாரிக்க தயாராகிறது அரசு

3வது அரசியல் அமைப்பை தயாரிக்க தயாராகிறது அரசு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம், பாராளுமன்றத்தில் விஷேட உரையொன்றை ஆற்றவுள்ளார். 

இலங்கை ஜனநாயகக் குடியரசின் 3வது அரசியல் அமைப்பை தயாரிக்கும் நோக்குடன், பாராளுமன்றம் ஒரு தேசிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் சபையாக மாற்றப்படவுள்ளமை குறித்தே இந்த உரை அமையவுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதன்படி எதிர்வரும் ஜனவரி 9ம் திகதி காலை ஜனாதிபதி இந்த உரையை ஆற்றுவார் என, அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். 

கடந்த ஜனவரி 8ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் வென்று ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடங்கள் பூர்த்தியடையவுள்ள நிலையில், அது தொடர்பிலான நிகழ்வுகள் குறித்து அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்றது. 

இதன்போது கருத்து வௌியிடுகையிலேயே ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com