சற்று முன்
Home / செய்திகள் / 184 இந்தியப் படகுகளையும் ஒரே தடவையில் விடுவிக்குமாறு இந்தியத் தூதுவர் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம்

184 இந்தியப் படகுகளையும் ஒரே தடவையில் விடுவிக்குமாறு இந்தியத் தூதுவர் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 184 இந்தியப் படகுகளையும் ஒரே தடவையில் விடுவித்து உதவுமாறு இந்தியத் தூதுவர் தரண் சிங் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான படகுகள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச் நாட்டின் பெயரில் இலங்கையின் பல பாகங்களிலும் படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தற்போது 184 படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் 10 படகுகளை மட்டும் விடுவிப்பதற்கான உத்தரவு மட்டும் பிறப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் ஓர் குழு இந்தியாவில் இருந்து வருகை தந்து படகுகளை பார்வையிட்டுச் சென்றனர்.

இதனையடுத்தே தற்போது இலங்கையில் உள்ள இந்தியத் தூதுவர் ஜனாதிபதியிடம் குறித்த கோரிக்கையினை விடுத்துள்ளார். இதன் பிரகாரம் இலங்கை அரசினால் கடந்த 2015ம் ஆண்டு கைப்பற்றப்பட்ட படகுகளில் 42 படகுகளை விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.்இருப்பினும் குறித்த 42 படகுகளில. 32 படகுகளே தரமாக இருந்த்தன் பெயரில் 32 படகுகளை மட்டுமே இந்திய அதிகாரிகள் எடுத்துச் சென்றிருந்தனர்.

இவற்றின் அடிப்படையிலேயே தற்போதும் 184 படகுகள் இலங்கை வசம் உள்ளதாக இந்தியாவினால் தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இதேநேரம் இந்தியத் தூதுவரின் கோரிக்கைக்கு ஜனாதிபதியால் இதுவரை பதில் ஏதும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com