சற்று முன்
Home / செய்திகள் / விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி!

விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் விமானத் தாக்குதலினால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது. 1999ஆம் ஆண்டில் முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு மந்துவில் கிராமத்தில் இலங்கை அரச விமானங்கள் நடாத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 25 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

இப் படுகொலையின் 19ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு நேற்றைய தினம் புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் பூமாலைகளினாலும் தீபங்களினாலும் அஞ்சலி செலுத்தியதுடன் கண்ணீர் விட்டு கதறியும் நீதியை வலியுறுத்தினர்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com