விஜயரட்ணம் ஞாபகார்த்த இருபதுக்கு இருபது (T20) கடின பந்து (லெத போல்) துடுப்பாட்ட போட்டி யாழில் முதல் முறையாக மின்னொளியில் நடத்தப்படவுள்ளது.
யாழில் உள்ள கழகங்களில் அழைக்கப்பட்ட எட்டு கழகங்களுக்கு இடையில் குறித்த போட்டிகள் நடத்தப்படவுள்ளன. போட்டிக்கான அணிகளின் அறிமுகம், சீருடை (ஜெசி) வெளியிடு என்பன நேற்றைய தினம் யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பும் நடைபெற்றது.
அதன் போது போட்டியினை நடாத்தும் விஜயரட்ணம் பிரபன் கருத்து தெரிவிக்கையில்,
எனது தந்தையாரின் ஞாபகார்த்தமாகவே குறித்த போட்டியினை நடாத்துகின்றேன். மின்னொளியில் யாழில் முதல் முதலாக நடத்த தீர்மானித்துள்ளோம்.
போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் யாழ்.இந்துக்கல்லூரி மைதானத்தில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் ஆரம்பமாகி தொடர்ந்து , போட்டிகள் ஆரம்பமாகும் தினமும் மாலை 5.30 மணிக்கு ஒரு போட்டியும் இரவு 8.30 மணிக்கு ஒரு போட்டியும் என இரண்டு போட்டிகள் நடத்தப்படும்.
குறித்த போட்டியில் சென்ரல் விளையாட்டு கழகம் , கே.சி.சி.சி. விளையாட்டு கழகம் , பற்றிசியன்ஸ் விளையாட்டு கழகம் , ஜொலிஸ்டார் விளையாட்டு கழகம் , திருநெல்வேலி மத்திய விளையாட்டு கழகம், சென்றலைட்ஸ் விளையாட்டு கழகம், AB விளையாட்டு கழகம் மற்றும் கிறாஸ்கோப்பர் விளையாட்டு கழகம் என்பன மோதவுள்ளன.
முதல் நாள் சுற்று போட்டியில் AB விளையாட்டு கழகமும் சென்றலைட்ஸ் விளையாட்டு கழகமும் மோதவுள்ளன.