சற்று முன்
Home / செய்திகள் / யாழில் மாணவர்களுக்கு ஹெரோயின் விற்க முயன்ற நால்வர் கைது

யாழில் மாணவர்களுக்கு ஹெரோயின் விற்க முயன்ற நால்வர் கைது

யாழ். பாடசாலை ஒன்றின் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்க முயன்ற குற்றச்சாட்டின் கீழ், நால்வர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

மேலும் சந்தேகநபர்கள் வசமிருந்த ஒன்பது ஹெரோயின் பைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். 

இவ்வாறு கைதானவர்கள் சங்கரப்பிள்ளை வீதி, ஆணைக்கோட்டை, மற்றும் இணுவில் தெற்கு பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

நீண்டகாலமாக இவர்கள் மாணவர்களை இலக்கு வைத்து ஹெரோயின் விற்பனையில் ஈடுபடுவதாக பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைக்கபெற்றிருந்தது. 

இதனையடுத்து இது குறித்து விசாரணை செய்து வந்த அவர்களுக்கு, விளையாட்டு மைதானம் ஒன்றிலுள்ள மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்கப்படுவதாக இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

இதன்படி சிவில் உடையில் சென்ற அதிகாரிகள் பிரதான சந்தேகநபரை கைதுசெய்ததுடன், அவர் மூலம் ஏனைய மூவரையும் மடக்கிப் பிடித்துள்ளனர். 

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com