சற்று முன்
Home / செய்திகள் / மணிவண்ணனுக்காய் திரண்டது பெருங்கூட்டம்

மணிவண்ணனுக்காய் திரண்டது பெருங்கூட்டம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் கலந்து கொள்ளும் “மணியுடன் பேசுவோம்” என்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் முடிவுறும் நிலையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலன கட்சி வேட்பாளர்கள் நேரலை மற்றும் நேரடி விவாதம் போன்றவற்றில் கலந்து கொண்டு வருகின்றனர்.

இதன்படி தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு வழங்கிவரும் மாற்றத்திற்கான இளைஞர் அணி “மணியுடன் பேசுவோம்” என்ற ஒரு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வு இன்று 4 மணிக்கு இராமநாதன் வீதியில் உள்ள சரஸ்வரதி மண்டபத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் மணிவண்ணன் தனது நிலைப்பாட்டினை தெளிவாக வெளிப்படுத்துவார் என்றும், அவருடைய நிலைப்பாடுகள் தொடர்பில் ஏதேனும் கேள்விகள் இருப்பின் குறித்த நிகழ்வில் வைத்து நேரடியாக அவரிடம் கேட்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதன்படி நடைபெற்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்து கொண்டதோடு மணிவண்ணன் தனது அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பான விளக்கவுரையையும் தொடர்ந்து பொதுமக்களின் கேள்விகளுக்கான பதில்களையும் வழங்கினார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com