குஞ்சர்கடை சந்திப்பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. வீட்டு உரிமையாளர்கள் இருவரும் அரச பணியாற்றிவருகின்றனர. இந்நிலையில் நேற்று பகல் 12 மணியளவில் வீட்டினுள் நுளைந்த திருடர்கள் அலுமாரிகளை உடைத்து அதற்குள் இருந்த 2பவுண் சங்கிலியையும் உண்டியலையும் ஒருதொகை பணத்தினையும் திருடிச்சென்றுள்ளார்கள். சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.