சற்று முன்
Home / செய்திகள் / நீண்டகாலம் சேவையாற்றிய தமிழரசுக் கட்சிக்காறரே முதல்வர் வேட்பாளர் – சி.வி.கே தெரிவிப்பு

நீண்டகாலம் சேவையாற்றிய தமிழரசுக் கட்சிக்காறரே முதல்வர் வேட்பாளர் – சி.வி.கே தெரிவிப்பு

தமிழரசு கட்சியின் நீண்டகாலம் சேவையாற்றியவரையே அடுத்துவரும் மாகாணசபை தேர்தலி ல் முதலமைச்சர் வேட்பாளராக நியமிப்பது என தமிழரசு கட்சியின் யாழ்.மாவட்ட கிளை தீர்மானித்திருப்பதாக கட்சியின் இணை பொது செயலாளர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்

மேற்படி விடயம் குறித்து இன்று அவை தலைவரின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

கடந்த மாதம் 30ம் திகதி தமிழரசு கட்சியின் யாழ்.மாவட்ட கிளை கூடி அடுத்துவரும் மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது? என்பது தொடர்பில் ஆராய்ந்தது. இதன்போது கட்சியின் யாப்புக்கு அமைவாக நீண்டகாலம் தமிழர சு கட்சியின் சேவையாற்றிய ஒருவரையே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த தீர்மானம் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது என கூறினார்.

இதேவேளை நீண்டகாலம் கட்சியில் சேவையாற்றிய ஒருவர் யார்? எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை அடுத்த மாகாணசபை தேர்தலில் முதலமைச்சராக நிறுத்துவது தொடர்பாக எழுந்துள்ள செய்திகள் குறித்தும் கேட்டபோது நீண்டகாலம் பணியாற்றியவர் யார்? என்பது இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என கூறினார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com