சற்று முன்
Home / செய்திகள் / தேர்தல்களைப் பிற்போட எவருக்கும் அதிகாரமில்லை

தேர்தல்களைப் பிற்போட எவருக்கும் அதிகாரமில்லை

மாகாணசபைத் தேர்தல்கள் உரிய காலத்தில் நடைபெறும். மாகாணசபைத் தேர்தல்களைப் பிற்போடுவதற்கு அமைச்சர்களுக்கோ வேறு எவருக்குமோ அதிகாரம் இல்லை என்று இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஒரு மாகாணசபையின் பதவிக்காலம் முடிந்து ஒரு வாரத்துக்குள், புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும். மாகாணசபைத் தேர்தலை அண்மையில் ஏற்பட்டது போன்ற பாரிய அனர்த்தம் அல்லது பிரபலமான ஆணை அல்லது நீதிமன்ற தீர்ப்பினால் மாத்திரமே பிற்போட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளின் பதவிக்காலம், எதிர்வரும், செப்ரெம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com