இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை மதியம் இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டோரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டம் குறித்து இரண்டு தரப்பினரும் விரிவாக கலந்துரையாடியதாக தெரியவருக்கின்றது.
புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் கோரிக்கைகளை சரியான முறையில் நிறைவேற்றிக் கொள்வது பற்றிய விடயங்கள் இங்கு பேசப்பட்டுள்ளன.
இன்றைய பேச்சுவார்த்தையில் அடிப்படையான விடயங்கள் பேசப்பட்டுள்ளதுடன் மீண்டும் சந்திப்பு இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது என இரண்டு கட்சிகளும் இணங்கியுள்ளன