ஆவா குமுவில் இருந்து பிரிந்து சென்ற தனுரொக்கின் வீட்டின் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிசாரினால் இன்றைய தினம் (01) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் தமிழரசுக் கட்சியினால் நிர்வகிக்கப்படும் பிரதேசசபை ஒன்றின் உப தவிசாளரின் சகோதரனான பிரபல ஆவாக்குமுவின் மூத்த உறுப்பினர் தம்பன் என அழைக்கப்படும் திவாகரன் என தெரிய வருகிறது.
மற்றைய நபர் பற்றிய தொடர்பான தகவல்களை பொலிஸ்சார் இது வரை வெளியிடவில்லை. அதே நேரம் உந்துருளியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிசார் நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.