காணாமற்போனோர் விடயம் தொடர்பில் அரசே பொறுப்புக் கூற வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஊடக அமையத்தில் இன்றைய தினம் (22) இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமற் போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு சொல்வதை மட்டும் பதிவு செய்வது மட்டுமல்லாமல் அவற்றின் உண்மைத் தன்மைகளைக் கண்டறியக் கூடிய வகையில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமானது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஊடக அமையத்தில் இன்றைய தினம் (22) இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமற் போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு சொல்வதை மட்டும் பதிவு செய்வது மட்டுமல்லாமல் அவற்றின் உண்மைத் தன்மைகளைக் கண்டறியக் கூடிய வகையில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமானது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.
அண்மையில் பத்திரிகைகளில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தொடர்பில் வெளிவந்த செய்திகள் குறித்துத் தெளிவுபடுத்தும் போது, இது ஒரு திட்டமிட்ட வகையிலான செயற்பாடு மட்டுமன்றி, எமது கட்சி மீது சேறுபூசும் வகையிலேயே ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன், ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோரது படுகொலைகள் தொடர்பில் எம்மீதே குற்றஞ்சாட்டப்பட்டிருந்த போதிலும், தற்போது உண்மைகள் வெளிவந்து கொண்டிருப்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இதனிடையே, காணாமற்போன உறவினர்கள் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தவர்களின் சாட்சியங்கள் முரண்பாடான வகையில் அமைந்துள்ளதையும் பத்திரிகைச் செய்திகளின் ஊடாக அறிய முடிகின்றது என்றும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.