யாழில் கடந்த 1990ம் ஆண்டு விடுதலைப்புலிகளால் தனது இரு சகோதரிகளும் கடத்தப்பட்டதாக அவர்களின் சகோதரி வாக்கு மூலம் அளித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு சனிக்கிழமை காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
அந்த சாட்சியமர்வில் சாட்சியம் அளிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
மானிப்பாய் வீதி ஓட்டுமட பகுதியில் நாம் வசித்து வந்த வேளை 1990ம் ஆண்டு 2ம் மாதம் 22ம் திகதி விடுதலைப்புலி உறுப்பினர் நசீர் என்பவரின் தலைமையில் வீடு புகுந்த ஒரு குழுவினர் எனது தங்கைகளான வாமதேவன் இந்திராதேவி (கடத்தப்படுகையில் வயது 22) மற்றும் வாமதேவன் சுதாதேவி (கடத்தப்படுகையில் வயது 15) ஆகியோரை கடத்தி சென்றனர். அதன் பின்னர் தகவல் இல்லை.
ஆனால் நாம் சில நாட்களுக்கு முன்பாக சாத்திரம் கேட்ட போதும் எனது இரு சகோதரிகளும் உயிருடன் தான் இருக்கின்றார்கள் என சாத்திரம் பார்த்தவர் கூறுகின்றார்.
எனவே எனது இரு சகோதரிகளும் இன்னமும் உயிருடன் தான் இருகின்றார்கள் என நம்புகின்றேன் என தெரிவித்தார்.