சற்று முன்
Home / முக்கிய செய்திகள் / எதிர்க்கட்சித் தலைவர் எமது கருத்துக்களை ஆர்வத்துடன் செவிமடுக்கவில்லை

எதிர்க்கட்சித் தலைவர் எமது கருத்துக்களை ஆர்வத்துடன் செவிமடுக்கவில்லை

அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்வதற்கு சிறைச்சாலை திறப்பு தன்னிடம் இல்லை எனத்தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தம்முடனான கலந்துரையாடலில் ஆர்வமற்ற நிலையில் ஏனோதானோ என்ற போர்வையிலேயே பங்குபற்றியதாக தமிழ் அரசியற் கைதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தம்முடனான கலந்துரையாடலின் முழுநேரத்தையும் பத்திரிகை வாசிப்பதிலேயை அவர் செலவிட்டதாகவும் இடையிடையே தமது கருத்துக்களுக்கு பதிலளித்துக்கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில்  இரண்டு வாரங்களுக்குள் ஐனாதிபதியுடன் பேசுவேன் எதிர்க்கட்சித் தலைவர் உறுதியளி்த்ததாகத் தெரிவித்துள்ள அவரது அலுவலக வட்டாரங்கள் மேலும் அரசியல் கைதிகள் விடயத்தில்நாம் அரசியல் குழு ஒன்றைஉருவாக்க முயற்சித்திருந்த நிலையில் அதற்குள் சில வேண்டாத தலையீடுகள் காரணமாக அது தடைப்பட்டது எனவும் எனவே பொறுமையாக இருங்கள் இந்த விடயத்தில் நாம் நிச்சயம் நடவடிக்கைகள் எடுப்போம் என இரா.சம்பந்தன் உறுதியளித்ததாகவும் தெரிவித்துள்ளன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எரிபொருட்களின் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 92 ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com