சற்று முன்
Home / முக்கிய செய்திகள் / அரசியலமைப்பு தொடர்பிலான வடமாகாண சபையின் அமர்வு ஒத்திவைப்பு .

அரசியலமைப்பு தொடர்பிலான வடமாகாண சபையின் அமர்வு ஒத்திவைப்பு .

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு வடமாகாண சபையின் தீர்வுத்திட்ட வரைவு தொடர்பிலான விசேட  மாகாண சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்து உள்ளார்.
வடமாகாண சபையின் 49ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாகாண சபையின் பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது.
இன்றைய அமர்வில் அரசியலமைப்பு திருத்தத்திற்காக வடமாகாண சபையினால் முன் வைக்கப்படவுள்ள தீர்வு திட்டம் தொடர்பில் விவாதிக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அந்நிலையில் இன்றைய அமர்வின் போது வரவு திட்ட யோசனை முழுமை பெறாததால் வரைவு தொடர்பிலான அமர்வு பிறிதொரு தினத்தில் நடைபெறும் என அவைத்தலைவர் தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எரிபொருட்களின் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 92 ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com