வேட்பாளர் ஒருவரே சமாதான நீதிவானாக வேட்புமனுவை உறுதிப்படுத்தியதையடுத்து கடைசி நிமிடம் வரை வேட்புமனு கேள்விக்குள்ளாகியிருந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகரசபையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்புமனு பகுதியளவில் நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த வேட்பாளரான சமாதான நீதவான் மற்றும் அவர் சமாதான நீதவானாக உறுதிப்படுத்திய 12 வேட்பாளர்கள் உள்ளிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்ட 13 வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டு போட்டியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை யாழ் மாவட்டத்தில் 17 சபைகளுக்கும் கட்டுப்பணம் செலுத்தியிருந்த தமிழர்விடுதலைக் கூட்டணி பட்டியல் நிரப்ப முடியாமையால் 02 இடங்களில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டதால் போட்டியிலிருந்து விலகிக்கொண்டுள்ளது.