படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்றது.
இதன் போது அங்கு வந்திருந்த பொலிசார் நினைவேந்தல் மேற்கொள்வதற்கு இடையூறு விளைவித்த வண்ணமிருந்தனர்.
எனினும் ஊடகவியலாளர்கள் ஊடக அமைய மண்டபத்தில் நினைவேந்தலை அனுஸ்டித்திருந்தனர்.
இந்நிலையில் ஐயாத்துரை நடேசனின் நினைவேந்தலை நடத்தியவர்களின் விபரங்கள் பொலிஸ், புலனாய்வு துறையினரால் சேகரிக்கப்பட்டது