சற்று முன்
Home / செய்திகள் / நல்லூர் சூழலில் விபச்சார நடவடிக்கை – விடுதியில் இருந்த நால்வர் கைது

நல்லூர் சூழலில் விபச்சார நடவடிக்கை – விடுதியில் இருந்த நால்வர் கைது

யாழ்.நல்லுார் ஆலய சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் விபச்சார நடவடிக்கை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த விடுதியை முற்றுகையிட்ட பொலிஸார், கொழும்பு மற்றும் புத்தளம் பகுதிகளை சேர்ந்த இரு பெண்களையும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். 

நல்லூர் ஆலய முன்வீதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதியில் விபச்சார நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக யாழ்ப்பாணம் பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் யாழ்ப்பாண தலைமை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் குறித்த தங்குமிட விடுதியை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது குறித்த தங்குமிட விடுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த இரண்டு தென்னிலங்கை பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் 20-25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் 

கொழும்பு மற்றும் புத்தளம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com