வரலாறு காணாத அளவில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக சென்னைவாசிகளுக்கு உதவ ஸ்கைப் நிறுவனம் முன்வந்திருக்கின்றது.
ஸ்கைப் நிறுவனம் தமிழகம் முழுவதிலும் சர்வதேச லேண்ட்லைன் மற்றும் மொபைல் போன் அழைப்புகளை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது.
சென்னையில் பெய்து வரும் பலத்த மழை மற்றும் வெள்ள பாதிப்புகளினால் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் அனைத்து சர்வேதச லேண்ட்லைன் மற்றும் மொபைல் போன் அழைப்புகளை முற்றிலும் இலவசமாக செய்து கொள்ளலாம் என ஸ்கைப் நிறுவனம் தெரிவித்துள்ளது.