சற்று முன்
Home / செய்திகள் / தற்கொலை குண்டுதாரிக்கு எதிராக கொள்ளை வழக்கு!

தற்கொலை குண்டுதாரிக்கு எதிராக கொள்ளை வழக்கு!

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் குண்டுத் தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் இன்சாப் அஹமட் என்பவருக்கு எதிராக 2013 ஆம் ஆண்டு கொள்ளை தொடர்பான வழக்கொன்றை பொலிஸார் தாக்கல் செய்துள்ளதாக தெரியவந்திருக்கிறது. 

அந்த வழக்கை கிரேண்ட்பாஸ் பொலிஸார் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

62 இலட்சம் ரூபாய் பெறுமதியான அலுமினியம் , பித்தளை மற்றும் இரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய கொள்கலன் ஒன்றை கொள்ளையிட்ட  சம்பவம் தொடர்பிலே இந்த வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பான வழக்கு கடந்த ஜனவரிமாதம் 29 ஆம் திகதி  மீண்டும் தொடரப்பட்ட போது இன்சாப் அஹமட் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகியதாகவும்  மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சனா தெரிவித்துள்ளார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com