சற்று முன்
Home / செய்திகள் / சுவாமிநாதன் வசமிருந்த அமைச்சுக்கள் பறிப்பு – பின்னணியில் சுமந்திரன் ?

சுவாமிநாதன் வசமிருந்த அமைச்சுக்கள் பறிப்பு – பின்னணியில் சுமந்திரன் ?

ரணில் விக்கிரமசிங்க தலமையிலான கடந்த ஆட்சியின்போது டீ.எம்.சுவாமிநாதன் வசமிருந்த மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி அமைச்சு பறிக்கப்பட்டு குறித்த அமைச்சுக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்வசப்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் அமைச்சர் டி.ம்.சுவாமிநாதன் முரண்பாடுகளைக் கொண்டிருந்த நிலையில் சுமந்திரனின் ஆலோசனையின் பேரிலேய சுவாமிநாதன் வசமிருந்த அமைச்சுக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்வசப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக ஏற்றுக்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சத்தியக்கடிதாசி கொடுத்திருந்த நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ள அதிருப்திகளைச் சமாளிக்கும்வகையில் குறித்த அமைச்சுக்கள் ஊடாக வடக்கில் ரணில் விக்கிரமசிங்க ஊடாக அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள கூட்டமைப்பினர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை டி.எம். சுவாமிநாதன் வசமிருந்த இந்து சமய விவகார அமைச்சு அமைச்சர் மனோகணேசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com