சற்று முன்
Home / செய்திகள் / ஜெ. மறைவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல்

ஜெ. மறைவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல்

1138694212untitled-3இயற்கை எய்திய தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அனுதாபங்களை வௌியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வௌியிட்ட செய்தியிலேயே இதனைக் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் ஆதரவை வெற்றிகொண்ட தலைவர் என்று அந்த செய்தியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அவரது மறைவினால் ஆழ்ந்த கவலையில் மூழ்கியுள்ள அவரது அன்பிற்குரிய மற்றும் தமிழ் நாட்டு மக்களுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ஜெயலலிதாகவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளார்.

போயஸ்கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. அங்கு சடங்கு, சம்பிரதாயங்கள் நடைபெற்ற பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் இன்று (6.12.2016) செவ்வாய்க்கிழமை மாலை மெரினா கடற்கரையில் உள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சமாதி அருகே ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com