சற்று முன்
Home / செய்திகள் / கிணற்றில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் மரணம்

கிணற்றில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் மரணம்

dead-01மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்சீமை அமுனதோவ பிரதேசத்தில் தன்னுடைய தாயுடன் தோட்டத்துக்குச் சென்ற 4 வயது சிறுவன், கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் 16.09.2016 அன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் தேவராஜ் சஜீவன் என தெரியவந்துள்ளது. கிணற்றில் விழுந்து கிடந்த தோடம் பழத்தை எடுப்பதற்காகச் சென்ற போதே சிறுவன் கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் மெதியத்தென்ன பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மடுல்சீமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com