சற்று முன்
Home / உள்ளூர் செய்திகள் / உடுவில் மகளீர் கல்லூரி பெற்றோர்கள் அவசர கலந்துரையாடல்

உடுவில் மகளீர் கல்லூரி பெற்றோர்கள் அவசர கலந்துரையாடல்

uduvil-girls-collegeஉடுவில் மகளீர் கல்லூரி பெற்றோர்கள் இடையிலான கலந்துரையாடல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கையில் ,

உடுவில் மகளீர் கல்லூரி அதிபர் மாற்றம் தொடர்பில் ஏற்பட்டு உள்ள குழப்ப நிலை தொடர்பில் கலந்துரையாடி தீர்வு ஒன்றினை பெற்றுக்கொள்ளும் நோக்குடனும் , மாணவிகளின் கல்வி செயற்பாடு அமைதியான முறையில் தொடர எதுவான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு , காங்கேசன்துறை வீதியில் சுன்னாக சந்திக்கு அண்மையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக திஷா ஹெஸ்ட் ஹவுசில் நடைபெறவுள்ளது.

இதில் உடுவில் மகளீர் கல்லூரியில் தரம் ஒன்று முதல் ,உயர்தரம் வரையில் , கல்வி கற்கும் மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவிகளின் எதிர்கால கல்வி நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாட வருமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com