சற்று முன்
Home / செய்திகள் / கண்ணீர்புகைக் குண்டுகளுடன் ஒருவர் கைது

கண்ணீர்புகைக் குண்டுகளுடன் ஒருவர் கைது

கடந்த 13ஆம் திகதி  பத்தரமுல்லை – பொல்துவ சந்திக்கு அருகில்  இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்  போது திருடப்பட்டதாக கூறப்படும் 5 கண்ணீர் புகை குண்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

26 வயதுடைய இளைஞர் ஒருவரே எத்துல்கோட்டே பகுதியில் வைத்து நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், இந்த கண்ணீர் புகை குண்டுகள்  பொலிஸாரால் முச்சக்கர வண்டியில் கொண்டு செல்லப்பட்டபோது போராட்டக்காரர்களால் அவை திருடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com