நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, சிறிலங்கா சுதந்திக் கட்சி ஆகிய கட்சிகள் இன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தன.
மேற்குறித்த கட்சிகளின் சார்பில்
முற்பகல் 10.30 மணியளவில் யாழ் மாவட்டச் செயலகத்தில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையிலான வேட்பாளர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான வேட்பாளர்களும் வேட்பு மனுத்தாக்கலின் போது பிரசன்மை கியிருந்தனர்.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் அதன் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான வேட்பாளர்களும் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இதனிடையே ஐங்கரநேசன் தலைமையிலான தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், சஜித் பிரேமதாசவின் மக்கள் தேசிய சக்தி, சந்திரகுமாரின் சமூக நீதிக்கான இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் இன்று நண்பகல் வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளன.