தனியார் பஸ்களுக்காக முற்கொடுப்பனவு அட்டைகளை அறிமுகம் செய்வதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
பஸ் நடத்துனர்களால் டிக்கட் வழங்கப்படாமை மற்றும் பயணிகளுக்கு மீதிக்காசு வழங்கப்படாமை காரணமாக பல பிரச்சினைகள் எழுவதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார்.
இந்த நிலமை காரணமாக பஸ் உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாக கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார்.