பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ என்பதனை மஹிந்த ராஜபக் ஷ ஆகஸ்ட் மாதம் ஏழாம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அதற்கு முன்னர் நாடு முழுவதும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் தெ ளிவுபடுத்தும் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் ஆற்றிய உரையின் ஊடாக சில விட்டுக்கொடுப்புக்களுக்கு தயாராகியுள்ளமை தெ ளிவாகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூற்று என்பன குறித்து விபரிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல இது குறித்து மேலும் குறிப்பிடுகையில்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கௌரவமான தீர்மானம் ஒன்றை எடுப்பேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததன் மூலம் அவர் சில விட்டுக்கொடுப்புக்களுக்கு தயாராகியுள்ளார் என்பது தெரிகின்றது.
அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலானது இருமுனை போட்டிக்களமாகவே அமையும் என்ற விடயத்தையும் ஜனாதிபதியின் உரை வெ ளிப்படுத்துகின்றது.
எப்படியிருப்பினும் எமது ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். இதனை சுதந்திரக் கட்சியும் ஏற்றுக்கொள்ளும் என்பதே எமது எண்ணமாகும். சுதந்திரக் கட்சியில் இருக்கின்ற சிலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொள்ளும் சாத்தியமும் உள்ளது. ஆனால் அதிகமானோர் எமது பக்கம் வந்துவிடுவார்கள்.
மேலும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ என்பதனை மஹிந்த ராஜபக்ஷ ஆகஸ்ட் மாதம் ஏழாம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கின்றோம்.
பொதுஜன பெரமுனவின் சம்மேளனம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஏழாம் திகதி நடைபெறும். இந்த சம்மேளனக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ இந்த அறிவிப்பை வெ ளியிடுவார் என்று எதிர்பார்க்கின்றோம்.
அதற்கு முன்னர் நாங்கள் நாடளாவிய ரீதியில் எமது ஜனாதிபதி வேட்பாளர் குறித்த பிரசார செயற்பாடுகளை நடத்துவோம். அவ்வாறு நாடு முழுவதும் மக்களின் கருத்துக்களை பெற்ற பின்னர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பார். அவர் .கோத்தபாய ராஜபக்ஷவாகவே இருப்பார் என்றார்.