வடமாகாண கல்வி அமைச்சினால் 249 பட்டதாாிகளுக்கு அரச வேலைக்கான நியமனம் வழங்க ப்பட்ட நிலையில், இதுவரை கடமைகளை பொறுப்பேற்காத பட்டதாாிகளுடைய விபரங்களை சமா்பிக்குமாறு வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் மாகாண கல்வி அமைச்சு அதிகாாிகளுக் கு உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
வேலையில்லாப் பட்டதாரிகள் தமக்கு வேலை வேண் டும், ஆசிரிய நியமனங்கள் வேண்டும் என் று வலியுறுத்தி யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங் களை நடத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் வைத்து கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி 249 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டன. நியமனம் பெற்றவர்களில் 160 பே ர் மட்டுமே பணியில் இணைந்துள்ளனர். ஏனையவர்கள் கடமைகளைப் பொறுப்பேற்க முன்வ ராத நிலையில், அத்தகைய பட்டதாரிகளின் விவரத்தைத் தருமாறு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கோரியுள்ளார்.