யாழ்.மாநகர சபை உறுப்பினரின் வீட்டுக்கு சென்ற வாள் வெட்டுக்குழு உறுப்பினரை தாக்க முயற்சித்த போது, உறுப்பினரின் மனைவி கூக்குரலிட்டதால் தாக்க வந்தவர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் செ.ரஜீவ்காந்தின் மீதே தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரியாலை வட்டாரத்தினைச் சேர்ந்த உறுப்பினரான ரஜீவ்காந் கொக்குவில் பகுதியில் விடு ஒன்றினைப் பெற்று கடந்த ஒரு மாத காலமாக வசித்துவருவதாகக் கூறப்படுகின்றது.
இ்நிலையில் குறித்த உறுப்பினரின் வீட்டிற்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மூன்று மோட்டார் சைக்கிளில் சென்ற ஆறுக்கும் மேற்பட்டவர்கள் வாள்களுடன் வீட்டிற்குள் புகுந்து உறுப்பினர் மீது தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்துள்ளனர்.