இந்தியாவிலிருந்து கொள்வனவுசெய்யப்பட்ட இரு புதிய புகையிரதங்களும் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் யாழ் கொழும்பு சேவையில் ஈடுபடவுள்ளன.
உத்தர தேவி எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த கடுகதி சேவையின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 27 ஆம் திகதி நண்பகல் 12.30 மணிக்கு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் அர்ஜூண ரணதுங்க கலந்துகொள்ளவுள்ளார்.
குறித்த உத்தர தேவி எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த கடுகதி சேவையானது காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு நோக்கி காலை 05.30 மணிக்கும் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி முற்பகல் 11.50 இற்கும் என வழமையான சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.