முதலாவது வடக்குமாகாண சபையின் கீதத்தை உருவாக்கிய கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை மாகாண சபையில் நடைபெற்றது .
மாகாண சபையின்பேரவைச் செயலகமாநாட்டு மண்டபத்தில்பேரவைத் தலைவரானசீ.வீ.கே.சிவஞானம்தலைமையில் இன்றுகாலை நடைபெற்றது.
இதன் போது மாகாணசபையின் கீதத்தைஉருவாக்கிய அனைத்துக்கலைஞர்களும்பொன்னாடை போர்த்தியும்மாலை அணிவித்தும்நினைவுப் பரிசுகள்வழங்கியும்கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் வடக்குமாகாண சபையின் பிரதமசெயலாளர் பத்திநாதன்,முன்னாள் பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் ,முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் தவராசா,மாகாண முன்னாள்அமைச்சர் மற்றும்உறுப்பினர்கள் உட்படஅதிகாரிகள் கலைஞர்கள்எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதே வேளை இந்நிகழ்விற்கு சபையின்முன்னாள் முதலமைச்சர்உள்ளிட்ட அமைச்சர்கள்மற்றும் உறுப்பினர்கள்பலருக்கும் அழைப்புக்கள்விடுக்கப்பட்ட போதிலும் முன்னாள் முதலமைச்சர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உறுப்பினர்கள் பலரும் நிகழ்விற்கு வருகைதரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.