சற்று முன்
Home / செய்திகள் / காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரி மீள் ஆரம்பிப்பு விழா அழைப்பு

காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரி மீள் ஆரம்பிப்பு விழா அழைப்பு

AJ18102 # School - Invitationயா/நடேஸ்வரக் கல்லூரி, மற்றும் யா/நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயம், ஆகிய
இரு பாடசாலைகளும் சொந்த இடத்தில் மீண்டும் ஆரம்பிக்கும் வைபவம் எதிர்வரும் 02.06.2016 வியாழக்கிழமை காலை 09.30 மணிக்கு வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. செ. சந்திரராஜா தலைமையில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் அதிதிகளாக யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சோ. சேனாதிராஜா,  வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்  தம்பிராசா குருகுலராசா, வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இராசா இரவீந்திரன், வட மாகாணக் கல்விப் பணிப்பாளர்  செல்லையா உதயகுமார், வலி வடக்கு பிரதேச செயலாளர் திரு. க. ஸ்ரீமோகனன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

நிகழ்விற்கு பழையமாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் யாவரும் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

 

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com