யா/நடேஸ்வரக் கல்லூரி, மற்றும் யா/நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயம், ஆகிய
இரு பாடசாலைகளும் சொந்த இடத்தில் மீண்டும் ஆரம்பிக்கும் வைபவம் எதிர்வரும் 02.06.2016 வியாழக்கிழமை காலை 09.30 மணிக்கு வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. செ. சந்திரராஜா தலைமையில் நடைபெறவுள்ளது.
நிகழ்வில் அதிதிகளாக யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சோ. சேனாதிராஜா, வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராசா, வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இராசா இரவீந்திரன், வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் செல்லையா உதயகுமார், வலி வடக்கு பிரதேச செயலாளர் திரு. க. ஸ்ரீமோகனன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
நிகழ்விற்கு பழையமாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் யாவரும் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.