முகநூலின் பயன்பாட்டினை தத்ரூபமாக சான்றுப்படுத்தும் வகையில் டாக்டர் நாகூர் ஆரிப் எழுதிய ‘முகநூலில் நான்’ எனும் பல்சுவை நூல் வெளியிட்டு நிகழ்வு இன்று (27) புதன்கிழமை மாளிகைக்காடு றிபா மண்டபத்தில் இடம்பெற்றது.
பிறைட் பியுச்ச பவுண்டேஷனின் வெளியீட்டில் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அப்துல்லா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நூலினை வெளியிட்டு வைத்தார்.
இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் எந்திரி எம்.ஆர்.எம்.பர்ஹான், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், நூல் விமர்சகர் ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல்.மன்சூர், நூலாசிரியர் டாக்டர் நாகூர் ஆரிப் உள்ளிட்ட புத்திஜீவிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், கல்விமான்கள், பாடசாலை அதிபர்கள், ஊடகவியலாளர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது நூலாசிரியர் டாக்டர் நாகூர் ஆரிப் நூலின் முதற் பிரதியினை நிகழ்வின் பிரதம அதிதி கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீமுக்கு வழங்கி வைத்து நூலினை வெளியிட்டு வைத்தார். அதனை தொடர்ந்து நிகழ்வின் அதிதிகளினால் நூலின் பிரதிகள் நிழ்வில் கலந்து கொண்டோருக்கு வழங்கி வைக்கப்பட்டன.
நூல் பற்றி நோக்கினையும் விமர்சனத்தையும் தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் எந்திரி எம்.ஆர்.எம்.பர்ஹான், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், நூல் விமர்சகர் ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல்.மன்சூர் ஆகியோர் நிகழ்த்தினர்.