சற்று முன்
Home / செய்திகள் / அனைத்துப் பட்டதாரிகளுக்கும் 2019 இல் நியமனம் என்கிறது பொருளாதார அமைச்சு

அனைத்துப் பட்டதாரிகளுக்கும் 2019 இல் நியமனம் என்கிறது பொருளாதார அமைச்சு

அரச சேவையில் பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான வயதெல்லை 45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என  தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ் ருவன் சந்திர தெரிவித்தார்.

இந்த புதிய நடைமுறைக்கு அமைய பட்டதாரிகள் அனைவரும் 2019ஆம் ஆண்டில் மூன்று கட்டங்களாக அரச சேவைக்குள் இணைத்துக் கொள்ளப்படுவர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:

அரச சேவையில் பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான வயதெல்லை 35ஆக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அரச வேலையில் பட்டதாரிகளை இணைப்பதற்கான வயதெல்லையை 45ஆக அதிகரிக்குமாறு வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை முன்வைத்தனர். அதற்கமைய வயதெல்லையை 45ஆக உயர்த்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

5 ஆயிரம் பட்டதாரிகள் அடுத்த மாதமும் 15 ஆயிரம் பட்டதாரிகள் வரும் செப்ரெம்பரிலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கான பயிற்சியாளர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

2019ஆம் ஆண்டில் மூன்று கட்டங்களில் பட்டதாரிகளை அரச சேவைகளில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போதே முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com