கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தின் தவத்திரு யோகர் சுவாமிகள் ஞாபகார்த்த பரிசளிப்பு விழா 14.10.2017 சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் யோகர் சுவாமிகள் மண்டபத்தில் நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் திரு.கே.கே.தவகீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் திரு. என் கனகரட்ணம் விந்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக பிரதேச கல்வி அதிகாரி திரு. எஸ். தேவகுமாரன் அவர்களும் மேலும் முன்னாள் அதிபரும் கோட்டைக்கல்வி அதிகாரியுமான திருமதி சிவபாலன், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை உப அதிபர் ரீ. கோபாலகிருஸ்ணன், மற்றும் பாடசாலையின் பிரதி அதிபர் திரு. என். கிருஸ்ணகுமார், உப அதிபர் பீ. சர்வானந்தன் ஆகியோரும்; கலந்து சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வில் கல்வி, விளையாட்டு, அடைவுமட்டம், அபிவிருத்தி என கல்விசார் செயற்பாடுகளில் முதன்மை நிலையில் உள்ள மாணவர்கள் அனைவரும் பாராட்டி பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.