சற்று முன்
Home / செய்திகள் / ஊடகங்களுக்கு அச்சுறுத்தலோ தடையோ விதிக்கவில்லை!

ஊடகங்களுக்கு அச்சுறுத்தலோ தடையோ விதிக்கவில்லை!

dc0b15bc5f53d66f9145a83c29be96f1_Lஊடகங்களுக்கு தான் நேற்றைய தினம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் ஓரிடத்திலேனும் ஊடக சுதந்திரத்துக்கு தடை விதிக்கவோ, ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கவோ இல்லை என பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி நிமல் போபகே தெரிவித்தார்.

பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு பணிவாகவே வேண்டுகோள் ஒன்றாகவே அவ்வறிக்கையை வெளியிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். பல்வேறு தரப்பினர் இவ்வறிக்கை தொடர்பில் பிழையான அர்த்தங்களை வெளியிடுவதற்கு முயன்றதாக தெரிவித்த செயலாளர் ஆரோக்கியமான ஊடகம் ஒன்றுக்காக வேண்டி ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுப்பதே தனது எதிர்ப்பாகும் எனவும் தெரிவித்தார்.

தற்போது 99% ஆன அரசியல் செய்திகளே ஊடகங்களில் வெளியிடப்படுவதனால், நாட்டின் அபிவிருத்தி மற்றும் பிற காரணிகள் தொடர்பில் அறிக்கையிடல் தொடர்பில் பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கு ஒன்றிணைவோம் என்று அவர் தெரிவித்ததோடு ஊடகங்களில் காணப்படும் சுதந்திரத்தின் ஒரு பிரிவையேனும் தனக்கும் வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். ஊடக நலன்புரி விடயங்களை மேற் கொள்ளும் வேலைத்திட்டங்களில் அரசியல் தலையீடுகளை தொடர்புபடுத்தி கொள்ள வேண்டிய தேவை இல்லை எனவும், இவ் அறிக்கையை வெளியிடுவது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், ஊடகத்துறை அமைச்சர், பிரதி அமைச்சர் ஆகியோர் அறிந்திருக்கவில்லை எனவும் செயலாளர் மேலும் சுட்டிக் காட்டினார்.

ஊடகவியலாளர்களுக்கு உயரிய அந்தஸ்த்தை பெற்றுக் கொடுப்பதற்காக தான் செயலாற்றுவதாகவும், தன்னால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் சரியான அர்த்தம் கொள்ளாமையினாலேயே இப்பிழையான கருத்துக்கள் எழுந்ததாகவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் மாஅதிபர், சட்ட மா அதிபர் மற்றும் ஊடகத்துறை செயலாளர் ஆகிய முக்கோணங்களையும் உள்ளடக்கிய ஓர் இயந்திரத்தை உருவாக்கி கொள்ள நடவடிக்கைகள் மேற் கொள்வதாகவும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு செயலாளர் பதிலளித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com