பௌத்தம் தொடர்பான ஏற்பாடுகள் பற்றி புதிய அரசியலமைப்பில் பிரச்சினை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என சிங்கள மக்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்ததற்கும் அப்பால் சென்றுஇ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பௌத்தத்திற்கான முன்னுரிமையினை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாகவே பிரதமரின் இக் கருத்தினை நிராகரித்துள்ளது. ...
Read More »எழுக தமிழிற்குப் பின்னரான இலங்கைத்தீவின் அரசியல்
எழுக தமிழிற்கு எதிராக தென்னிலங்கையில் தோன்றிய எதிர்ப்பு எழுக தமிழின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தியுள்ளது. ‘எழுக தமிழ்’; தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்திருக்கக் கூடிய விளைவுகளை விடவும் அதிகரித்த விளைவை அது தென்னிலங்கையில் ஏற்படுத்தியிருக்கிறது என்று கூடச் சொல்லலாம். இத்தனைக்கும் எழுக தமிழ் ஒரு போர்ப்பிரகடனம் அல்ல. அது யாருக்கும் எதிரானது அல்லவென்று விக்னேஸ்வரன் தனது உரையின் ...
Read More »ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தலைவர்களும் தமிழ் மக்களும் – நிலாந்தன்
வவுனியாவில், அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளியீட்டின் போது கஜேந்திரகுமார் பின்வரும் தொனிப்படப் பேசியிருந்தார். ‘2001 இலிருந்து நான் அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். எனது அரசியல் வாழ்வில் அரசியல் தலைவர்களும், மக்களும் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் இந்தளவுக்கு புவிசார் அரசியலைப்பற்றி உரையாடப்பட்டது இதுதான் முதற் தடவை. அந்த வகையில் இது ஒரு வித்தியாசமான மேடை’ என்று. அந்த ...
Read More »எழுக தமிழ் : தமிழ் மக்கள் தற்காப்பு அரசியலை விட்டு வெளிவர வேண்டும் – நிலாந்தன்
தமிழ் மக்களின் அரசியல் ஒருவித தற்காப்புப் பொறிக்குள் சிக்குண்டிருக்கிறது. இப்பொழுது கொழும்பு அல்லது வெளித்தரப்புக்கள் ஏதாவது ஒரு நகர்வை மேற்கொண்டால் அதற்கு பதில்வினையாற்றும் ஒரு தரப்பாகவே தமிழ்த்தரப்பு காணப்படுகிறது. ஆனால் ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் நிலைமை வேறாகவிருந்தது. தமிழ்த்தரப்பு மேற்கொள்ளும் ஒரு தாக்குதலுக்கு எதிர்த்தரப்பும் வெளித்தரப்புக்களும் பதில்வினையாற்றும் நிலைமை அப்பொழுது காணப்பட்டது. இவ்வாறு தமிழ்த் தரப்பானது ...
Read More »மனிதாபிமானப்பிரச்சினைகளில் அரசாங்கம் தாமதமற்ற தீர்வை முன்வைக்கவேண்டும் – என்.கே
தமிழ் மக்கள் மத்தியில் அவர்கள் எதிர்கொண்டுள்ள மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு உரிய முழுமையான தீர்வுகள் இன்று வரையில் கிடைக்கப்பெறவில்லை. அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் இழுத்தடிப்பு நடைபெறுகின்றது. படையினர் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிப்பதில் தாமதங்கள் உள்ளன. காணாமல்போனோர் விடயத்திலும் பிரச்சினைகள் உள்ளன. மீள்குடியேற்றத்தில் தாமதங்கள் உள்ளன. இவ்வாறான விடயங்கள் ஒட்டுமொத்தத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இயல்புநிலையினை ஏற்படுத்துவதில் சிக்கல்களைத் ...
Read More »அரசாங்கத்தின் உத்தரவாதங்கள் காப்பாற்றப்படவேண்டும் – நிருபா குணசேகரலிங்கம்
பரவிபாஞ்சான் பகுதியில் உள்ள மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் விரைவில் விடுவிக்கப்படும் என உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் மக்களின் தொடர் போராட்டங்களின் பின்னரே இவ் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. போரின் பின்னரான நிலைமையில் மீள்குடியேற்றம் என்பது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நியமங்களின் படி மக்களின் உரிமையாகவுள்ள போதும் அவ் உரிமை சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதையே கள யதார்த்தங்கள் புலப்படுத்துகின்றன. ஆட்சி ...
Read More »சம்பந்தர் சிந்திப்பது சரியா? நிலாந்தன்
அரசியல் அமைப்பு எனப்படுவது சாதாரண சனங்களைப் பொறுத்தவரை ஒரு கடினமான வறண்ட பாடப்பரப்பு. அரசறிவியல் மாணவர்களால் அல்லது ஆய்வாளர்களால் நுணுகி ஆராயப்படும் இவ் விடயப்பரப்பை சாதாரண வாசகர்கள் விரும்பிப் படிப்பது குறைவு. ஈழத்தமிழர்கள் மத்தியில் அரசியலமைப்பு விவகாரங்களைப் பற்றி இதுவரையிலும் வெளிவந்திருக்கக் கூடிய பெரும்பாலான நூல்கள் ஒன்றில் பரீட்சை மைய நோக்குநிலையிலிருந்து எழுதப்பட்டவை அல்லது ஆய்வு ...
Read More »காணாமல் போனோருக்கான நீதி? நிருபா குணசேகரலிங்கம்
காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்படவேண்டிய மனிதாபிமானப் பிரச்சினையாகவுள்ளது. எனினும் இப்பிரச்சினை இது பலருக்கு பலவிதமான வடிவங்களில் தென்படுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தளவில் அவர்களது உறவுகள் மீளவேண்டும், காணாமல் செய்யப்பட்டோரின் நிலை என்ன என்ற கேள்விகள் கொண்டதாக உள்ளன. இதனை அண்மையில் வெளியாகிய சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கை கூட மீளவும் நினைவுறுத்தியிருந்தது. இதேவேளை ...
Read More »அரசியல் கைதிகளின் விடுதலையில் மனிதாபிமானம் காட்டப்படுமா? நிருபா குணசேகரலிங்கம்
அரசியல் கைதிகளின் விடுதலை இன்று வரையில் நடைபெறவில்லை. அவர்கள் தொடர்பில் அரசாங்கம் மனிதாபிமானத்தினை வெளிப்படுத்தவில்லை. சிறைகளுக்கு உள்ளிருந்து விடுதலைக்காக ஏங்கும் அரசியல் கைதிகள் விடயத்தில் சிறைகளுக்கு வெளியே காணப்படவேண்டிய காத்திரமான அழுத்தங்களுக்கும் பற்றாக்குறையே நிலவுகின்றன. அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கோரிக்கைகளும் போராட்டங்களும் பல காலமாக நடைபெற்றே வருகின்றன. சிறைகளுக்கு உள்ளிருந்து அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக ...
Read More »சிங்களக் குடியேற்றம் பற்றிய வடக்கின் கேள்விக்கு அரசாங்கத்தின் பதில் என்ன? நிருபா குணசேகரலிங்கம்
தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடுகள்அச்சம் தரும் தொடர்விடயமாகவே உள்ளன. வடக்கு மாகாண முதலமைச்சர் வடக்கில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களின் இன்றைய நிலை பற்றிய அறிக்கையொன்றைக் கோரியுள்ளார். அவர், தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றமை தொடர்பில் தான் பேசியிருந்த போதும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இல்லை என்பதனால் இது பற்றி அழுத்தம் பிரயோகிக்கப்பட ...
Read More »